Saturday 28 May 2016

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

பாரம்பரிய உணவுகள் - பகுதி 3

# பாரம்பரிய உணவுகளில் பத்திய சமையல் என்று உண்டு.

# விருந்துகளில் அல்லது விழாக்காலங்களில் அதிகமாக இனிப்பையோ கார உணவுகளையோ உண்டு அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சினைகளை சரி செய்ய பத்திய சமையல் உதவுகிறது

# இன்று தேங்காய் துவையல் , கண்டதிப்பிலி ரசம் செய்முறைகளை பார்ப்போம்.


தேங்காய் துவையல் 




தேவையான பொருட்கள் :


தேங்காய்  (துருவியது) - 1 கப்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

உளுத்தம் பருப்பு  - 2 மேஜை கரண்டி

காய்ந்த மிளகாய் - 3- 4

புளி - சிறிதளவு

பெருங்காயம்  - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :


# அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகை போடவும்.

# கடுகு வெடித்ததும் , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம்  சேர்த்து வறுக்கவும்.

# பருப்பு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்

# பிறகு , தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கவும்.

# புளி, உப்பு சேர்த்து வறுத்தவற்றை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------


கண்டந்திப்பிலி ரசம் 



தேவையான பொருட்கள் :


புளி - ஒரு கோலிக்குண்டு அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி 

பெருங்காயம் - தேவையான அளவு 

கறிவேப்பிலை - சிறிதளவு 

துவரம் பருப்பு - 1 கப் (வேக வைத்தது)

உப்பு - தேவையான அளவு 

வறுத்து அரைக்க :


கண்டந்திப்பிலி - 4

மிளகு - 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - 1 மேஜைகரண்டி 

சீரகம் - 1 தேக்கரண்டி 

தாளிக்க :


நெய் - 1 தேக்கரண்டி 

சீரகம் - 1/2 தேக்கரண்டி 

கடுகு - 1/2 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை :


# வெறும் கடாயில் கண்டந்திப்பிலி , மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

# நன்றாக சிவந்தவுடன் சீரகம் சேர்த்து இறக்கவும்.

# ஆறியவுடன் இந்த கலவையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.

# புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். 

# அடுப்பில் ரசம் செய்யும் பாத்திரத்தை வைத்து புளிக்கரைசல் , மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு , பொடித்து வைத்த ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

# புளியின் வாசனை மாறிய பிறகு. வேக வைத்த பருப்பை நீர் விட்டு கலக்கி ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.

# தனியாக கடாயில் நெய்  ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து அது வெடித்ததும், காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் மேல் சேர்க்கவும்.


குறிப்புகள்:


* தேங்காய் துவையல், கண்டந்திப்பிலி ரசம் இரண்டையும் சூடான சாதத்துடன் பரிமாறவும் 

* தொட்டு கொள்ள ஏதேனும் பொரியல் அல்லது சுட்ட அப்பளம் நன்றாக இருக்கும்.

* கண்டந்திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

* இந்த உணவுகள் செரிமான சக்தியை அதிகரிக்கும்.






No comments:

Post a Comment

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...