முருங்கைப்பூ
முருங்கைப்பூ முருங்கையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. முருங்கைக் கீரை, முருங்கை காய், முருங்கைப்பூ அனைத்துமே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டத்தையும் அளிக்கக்கூடியது. முருங்கை பூவின் நன்மைகள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். 40 வயதிற்கு மேல் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரி செய்ய முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வர வேண்டும். வெள்ளெழுத்து மாறும். கண் ஏற்படும் வெண்படலமும் மாறும். மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் வைத்து கா...