மதிய நேரத்தில் ஏற்படும் சோர்வை விரட்டும் வழிகள்
மதிய நேரத்தில் ஏற்படும் சோர்வை விரட்டும் வழிகள் மதிய நேரம் 2 மணி அல்லது 3 மணி போன்ற நேரத்தில் மனிதர்களில் பலர் சோர்வாக உணர்கிறார்கள். வேலையை செய்வதில் மெத்தனம், தூக்கம் வருவது, கவனமின்மை, போன்றவை மதிய நேர சோர்வின் அறிகுறியாகும். நிறைய பேர் ஒரு காபி அல்லது டீ அருந்தியோ அல்லது அதிக இனிப்பான நொறுக்கு தீனிகளை உண்டோ இந்த சோர்வை விரட்ட முயலுகின்றனர். மதிய நேர சோர்வை விரட்டி நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதற்கான வழிகளை இந்த கட்டூரையில் காண்போம். 1. சூரிய ஒளி காலை நேர சூரிய ஒளியில் தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் நிற்பது நம் உடலில் உள்ள சர்க்கார்டியன் ரிதம் சீராக உதவுகிறது. அதிகாலையில் எழுந்து காலை நடைப்பயிற்சியை மேற்கொள்வது அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும். தூக்கத்தை மேம்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் சூரிய ஒளி நம் உடலில் படும் பொழுது அதனுடைய அளவு குறைந்து, நாளின் இறுதியில் தேவையான அளவு சுரந்து மதிய நேரத்தில் சோர்வை உருவாக்காமல் நல்ல இரவு தூக்கத்தை கொடுக்கும்....