Showing posts with label தலைவலி. Show all posts
Showing posts with label தலைவலி. Show all posts

Friday, 19 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

 

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

              தலைவலி


                      


இரண்டாம் நிலைத் தலைவலிகள்


        இரண்டாம் நிலைத் தலைவலிகள் என்பது நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். பிரச்சனை என்னவென்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்வதே இந்த வகை தலைவலிகளை குணப்படுத்தும்.

சைனஸ் தலைவலி 


        சில நேரங்களில் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி ஏற்படலாம். சைனஸ் என்பது நம் மூக்குப்பகுதியில் உள்ள சிறிய காற்று பைகள் போன்ற அமைப்பாகும். சில நேரங்களில் இந்த பைகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒவ்வாமையின் காரணமாக வீங்கி அடைத்து கொள்ளும். அதை தான் சைனஸ் இன்பெக்ஷன் என கூறுகிறோம். 

        சைனஸ் தலைவலி காலநிலை மாற்றத்தால் ஏற்படலாம். இந்த தலைவலி மூக்குப்பகுதியிலும், நெற்றியிலும் வலி உண்டாகும். 

ஹார்மோன் தலைவலி 


        பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் இந்த தலைவலி மாதவிடாய் நாட்களிலும், கர்பகாலத்திலும் அதிகமாக இருக்கும். மாதவிடாய் நாட்களுக்கு முன்னும், பின்னும், தலைவலி உருவாக வாய்ப்புகள்  உண்டு.  இதை மாதவிடாயில் தோன்றும் ஒற்றை தலைவலி எனவும் கூறலாம்.


காபின் தலைவலி (caffeine headache)


        காபின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.அளவுக்கு அதிகமா காபின் எடுத்து கொள்வது தலைவலியை உண்டாக்கும். ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக காபின் செயல்படுகிறது.  காபின் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை எடுத்து கொள்வது ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க உதவும்.

உடல் உழைப்புக்கு பின் வரும்  தலைவலி (exertion headache )


        அதிக நேர உடற்பயிற்சி, பளு தூக்கும் பயிற்சி, நீண்ட தூர ஓட்டப்பயிற்சி என அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பயிற்சிகளுக்கு பிறகு தலைவலி உண்டாகும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலையின் இரண்டு புறத்திலும் வலி உண்டாகும். 

        இந்த தலைவலி சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அதிக நேரம் நீடித்தால் உடனே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தால் தலைவலி (Hypertension headache )


            உயர் இரத்த அழுத்தம் தலைவலியை உண்டாக்கும். இது உடலுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இரத்த அழுத்தம் அதிக அளவு உயரும் பொழுது இந்த தலைவலி ஏற்படும். இதை சரியாக கவனித்து சிகிச்சை செய்யா விட்டால் மாரடைப்பு, மூளையின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். 

ரீபௌண்ட் தலைவலி  (Rebound  headache )


        ரீபௌண்ட் தலைவலி அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மிதமாக ஏற்படும் ஒரு தலைவலியாகும். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது இந்த தலைவலி உண்டாகும். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பதே இந்த வகை தலைவலி வராமல் தடுப்பதற்கு வழியாகும்.

போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி (post - traumatic headache)


        போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி என்பது ஏதோவொரு சூழ்நிலையில்  தலையில் காயம் ஏற்பட்டதற்கு  பிறகு உருவாகும் ஒரு தலைவலி ஆகும். இது ஒற்றைத்தலைவலி அல்லது டென்ஷன் தலைவலி போல் இருக்கும். பொதுவாக தலையில் காயம் ஏற்பட்ட பிறகு ஆறு முதல் பனிரெண்டு மாதங்கள் வரை இருக்கும் .

முதுகெலும்பு தலைவலி (spinal  headache )


        முதுகெலும்பு தலைவலி நம் தண்டுவட திரவத்தின் அழுத்தம்  குறைவதால் ஏற்பட்டு இடுப்புப்பகுதியில் வலியை உண்டாக்கும்.  நெற்றி, முன் கழுத்து, தலையின் பின்புறம் ஆகிய பகுதிகளில் வலி உண்டாகும்.  குமட்டல், வாந்தி, கண் பார்வையில் மாற்றம், கைகளில் வலி உண்டதால் ஆகியவை இந்த தலைவலியின் அறிகுறிகளாகும்.




Thursday, 18 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 1

தலைவலி




        தலைவலி என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். மித வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி என வலியிலும் பல நிலைகள் உண்டு.  ஓருவருக்கு மாதத்திற்கு எத்தனை முறை தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து,  குறுகிய கால தலைவலி, நாள்பட்ட தலைவலி என வகைப்படுத்தப்படுகிறது.

1.குறுகிய கால தலைவலி :
    

        ஒரு   மாதத்தில் 15 நாட்களுக்கு குறைவாக அடிக்கடி ஏற்படும் தலைவலி அரை மணி நேரம் தொடங்கி பல மணி நேரத்திற்கு நீடிக்கும்.


2. நாள்பட்ட தலைவலி :

            ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல்  ஏற்படும் தலைவலி   தொடர்ச்சியாக  இருந்து கொண்டே இருக்கும்.




    தலைவலியில் பல வகைகள் உண்டு. முதன்மை வகைகள் பின்வருவன:


அதீத பதட்டத்தால் தலைவலி :


    அதீத பதட்டத்தால் தலைவலி எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக மனஉளைச்சலினால் ஏற்படுகிறது. இந்த தலைவலி இருந்தால் சோர்வும், தலை முழுவதும் வலியும்  உண்டாகும். கழுத்து, நெற்றி மற்றும் தோள் தசைகளில் வலி உண்டாகும். 

இதை சரிப்படுத்த : பதட்டம் கொள்ளக்கூடாது. மனஉளைச்சலை சரியாக கையாள வேண்டும்.




கொத்து தலைவலி :


    கொத்து தலைவலி என்பது எரிச்சலுடன் கூடிய தலைவலியாகும். இது ஒரு கண் அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் உருவாகும் வலியாகும். கண் வீக்கம் , விழி முழுவதும் சிகப்பு நிறமாக மாறுதல், அதிக வியர்வை, மூக்கடைப்பு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 

    கொத்து தலைவலி 15 நிமிடம் முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நாளில் பல முறை ஏற்படும். ஒரு தடவை தலைவலி குறைந்தவுடன் அடுத்த தலைவலி ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு தலைவலியாகும். இந்த தலைவலி உருவாவதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.


ஒற்றை தலைவலி (மைக்ரேன்)


        ஒற்றை தலைவலி ஒரு நரம்பியல் நோயாகும். தலையின் ஒரு புறம் மட்டும் துடிக்கும் வலி தோன்றும். பல நாட்களுக்கு நீடிக்கும். அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குமட்டலும், வாந்தியும் பொதுவான அறிகுறிகள். சில பேருக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் பொழுது கண் குறைபாடுகளும் உருவாகும். 

        பெண்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். ஒற்றை தலைவலி உருவாவதற்கான காரணிகள் தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவது, சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாமல் இருத்தல். ஹார்மோன் அளவின் மாற்றங்கள், சில உணவு வகைகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவையாகும்.

    இதை சரிப்படுத்த ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும். நோயை உருவாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


ஹெமிக்ரானியா தொடர் தலைவலி :      

    ஹெமிக்ரானியா தொடர் தலைவலி என்பது  மிதமான தலைவலி தலையின் ஒரு புறத்தில் மட்டும் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். ஒரு நாளின் சில நிமிடங்கள் மட்டும் தீவிரமான தலைவலி இருக்கும். இது பெண்களை அதிகமாக பாதிக்கும். 

        கண் எரிச்சல், மூக்கடைப்பு, நெற்றியில் அதிக வியர்வை சுரப்பது, அமைதியற்ற தண்மை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 


குத்துத் தலைவலி :

        குத்துத்தலைவலி  என்பது குறைந்த நேரத்தில் தீவிரமான தலைவலி ஏற்படும். இது சில நொடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு நாளில் பல முறை உண்டாகும் இந்த தலைவலி எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.  ஒவ்வொரு முறையும் தலையின் வெவ்வேறு பகுதியில் தலைவலி உருவாகும்.


தண்டர் கிளாப் தலைவலி 


        தண்டர் கிளாப் தலைவலி என்பது இடி இடிப்பது போல் வலி தோன்றி ஒரு நிமிடத்தில் குறைந்து விடும். ஆனால் இந்த தலைவலி நீண்ட நேரம் இருந்தால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். 

    இந்த தலைவலி பக்கவாதம், மூளையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைதல் , மூளையில் அடிபடுதல்,  தண்டுவடத்தில் திரவம் கசிதல் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். இந்த தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து  உடல்நிலை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.





            











     

Start the Year Right: Building a Healthy Eating Routine in 2025

Start the Year Right  Building a Healthy Eating Routine in 2025      As the clock strikes midnight and a new year begins, it’s the perfect ...