Posts

Showing posts with the label juice

சாத்துக்குடி பழச்சாறு

Image
சாத்துக்குடி பழச்சாறு      சாத்துக்குடி இனிப்பும்,  புளிப்பும்  நிறைந்த விலை குறைவான சத்து மிக்க பழம்.இந்த சிட்ரஸ் பழ வகையில் 90% நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. சாத்துக்குடி குறைவான கலோரிகளை கொண்டது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் - சி, மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. 1. சாத்துக்குடி பழச்சாற்றை அருந்துவதால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் நச்சுத்தன்மையை போக்குகிறது. சிறுநீர்த்தொற்று பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி பழச்சாறு அருந்துவது தொற்றை இல்லாமல் செய்யும். 2. சாத்துகுடி ஆண்டி கார்சினோஜெனிக், ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆண்டி பயாடிக் பண்புகளை கொண்டுள்ளது. இது வாய்ப்புண், வயிற்றுப்புண் அவதி கொண்டிருப்பவர்களுக்கும் வெதுவெதுப்பான நீரில் சாத்துக்குடி பழச்சாற்றை அருந்த புண்கள் குணமாகும். 3. உடலில் நீர் இழப்பு ஏற்படும் பொழுது அதிக களைப்பை அடையும். களைப்பை தீர்க்கும் பானமாகவும், ஆற்றல் தரும் பானமாகவும் சாத்துக்குடி பழச்சாறு இருக்கும். 4. தினமும் ஒரு டம்ளர் சாத்துக்குடி பழச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும...

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் -2

Image
   உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் பசலைக் கீரை பழச்சாறு  தேவையான பொருட்கள்  பசலைக் கீரை  - 100 கிராம்  பச்சை திராட்சை - 30 எண்கள்  வெள்ளரிக்காய்  - 50 கிராம்  துளசி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்  புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு  எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து எடுத்தது. செய்முறை  1. பசலைக் கீரை, புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். 2. பச்சை திராட்சையை நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்  3. வெள்ளரிக்காய் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 4. பின்னர் மிக்ஸியில் பசலைக்கீரை, புதினா இலைகள், பச்சை திராட்சை, வெள்ளரிக்காய் துண்டுகள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 5. பருக கொடுக்கும் பொழுது துளசி விதைகளை சேர்த்து கலக்கி கொடுக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்க்க கூடாது.  பலன்கள் : 1. அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. 2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால்  செரிமான சக்தியை அதிகரிக்கிற...