Posts

Showing posts with the label greenleafyvegetable

கீரைகளும் அதன் பலன்களும் - 5 முடக்கத்தான் கீரை

Image
 கீரைகளும் அதன் பலன்களும் - 5 முடக்கத்தான் கீரை      முடக்கறுத்தான் கீரை முடக்கு நோய்களை வேரறுக்கும் தன்மை உடையது. முடக்கற்றான், முடக்கத்தான் என பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது. முடக்கத்தான் கீரை சமீப நாட்களில் மூட்டு வலிக்கு அதிகமாக பயன்படுத்த படுகிறது.      முடக்கத்தான் கீரையை இட்லி, தோசை, சூப், பொடி, துவையல், சட்னி  என பல வகையில் நம் உணவில் சேர்த்து கொள்ள முடியும். முடக்கத்தான் கீரையின் மருத்துவ பலன்கள்  1. முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த வலி  நிவாரணியாக செயல்படும். இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து வாத நோயை குறைக்க உதவுகிறது. 2. முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பருக உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். 3. முடக்கத்தான் இலை பொடியுடன் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட இருமல் கட்டுப்படும். 4. நல்லெண்ணையில் முடக்கத்தான் இலைகளை இட்டு காய்ச்சி அந்த எண்ணையை அடிபட்ட இடத்தில் தடவ வலி குறையும். 5. பிரசவத்திற்கு பின் பெண்களின் கருப்பையில் இருக்கும் அழுக்குகளை வெளி...

கீரைகளும் அதன் பலன்களும் - 4 கரிசலாங்கண்ணி கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும் - 4 கரிசலாங்கண்ணி கீரை        கீரைகளின் ராணி என அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரை மஞ்சள்  மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. கரிசலாங்கண்ணி உணவுக்கான கீரை  அல்ல. இது அதிக மருத்துவ குணங்களை உள்ளடிக்கியது. அவை  1. கரிசலாங்கண்ணி இலையின் சாறை சிறு தீயில் இட்டு தைலமாக காய்ச்சி காலையிலும், மாலையிலும்  வந்தால் இருமல் குணமாகும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகும், காதுவலி, கண் எரிச்சல் நீங்கும்.  2. கரிசலாங்கண்ணி இலையை அப்படியே இட்டு மென்று சாப்பிட உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும். இந்த கீரையை பருப்புடன் சேர்த்து கூட்டாக சாப்பிட இரத்தத்தை சுத்தம் செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். 3. கரிசலாங்கண்ணி கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சியை அளிக்க கூடியவை. கரிசலாங்கண்ணி இலையின் சாறை தேங்காயெண்ணெய் உடன் சேர்த்து காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து  கண் பார்வைத்திறன் மேம்படும். 4. மஞ்சள் காமாலைக்கு பெரும் தீர்வு கரிசலாங்கண்ணி  இலையாகும். கரிசலாங்கண்ணி இலையை மசித்து அதை  கலந...

கீரைகளும் அதன் பலன்களும் - 3 மணத்தக்காளி கீரை

Image
கீரைகளும் அதன் பலன்களும்   மணத்தக்காளி கீரை     மணத்தக்காளி கீரை  மருத்துவ மூலிகையாக பயன்படும் கீரை வகைகளில் ஒன்று. இந்த கீரை செடியின் இலைகள், அதன் பழம் ஆகியவற்றை  நேரடியாக உணவில் பயன்படுத்தலாம். மணத்தக்காளி காய்களை வற்றலாக பயன்படுத்தலாம். இந்த கீரையை கொண்டு குழம்பு, கூட்டு, பொரியல், மசியல் என பல உணவுகளை சமைக்க முடியும்.           மணத்தக்காளி கீரை அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் கால்சியம், பாஸ்பரஸ்  மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது . அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் : 1. மணத்தக்காளி கீரை வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. 2. சருமத்தில் ஏற்படும் நோய் தொற்றை குணமாக்க மணத்தக்காளி கீரையின் சாறு உதவுகிறது. 3. உடலின் வெப்பநிலை சீராக இருக்க உதவுகிறது. 4. சிறுநீர் மற்றும் வியர்வையின் அளவை அதிகரித்து உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்றுகிறது. 5. காய்ச்சலால்  ஏற்படும் கை, கால் வலியை போக்க உதவுகிறது. 6.உடல் களைப்பை போக்கி நல்ல உறக்கத்தை கொடுக்கும். 7. காச நோய் உள்ளவர்களுக்கு...

கீரைகளும் அதன் பலன்களும் - 2

Image
 கீரைகளும் அதன் பலன்களும் பொன்னாங்கண்ணி கீரை       பொன்னாங்கண்ணி கீரை நம் இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதில் இரண்டு வகை உள்ளது பச்சை நிறத்தில் இருப்பது இந்தியாவில் விளைய கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ளது சீமை பொன்னாங்கண்ணி என அழைக்கப்படுகிறது. நாட்டு வகை கீரை அதிக நற்குணங்களை உடையது. இதை பொரியல், கூட்டு, மசியல், சூப் என பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.       இந்த கீரையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் சருமம் பொன் போல் மின்னும். இதை தவிர இந்த கீரை அதிக மருத்துவக்குணங்களை உடையது. அவை : 1.உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை மிளகுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். 2. பொன்னாங்கண்ணி கீரை உடல் வலிமையை அதிகப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தும். 3. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்க உதவும். 4. இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்வை அளித்து நாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக  செயல்பட  பயன்படுகிறது.  5. கல்லீரல் மற்றும் மூல நோய்களை குண...