மலச்சிக்கல்
மலச்சிக்கலை தீர்ப்பது எப்படி? மலச்சிக்கல் என்பது நம் உடலிலிருந்து மலத்தை வெளியேற்ற கஷ்டப்படுவதும், வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பதும் ஆகும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் குறைந்த அளவு நீர் அருந்துவதாகும். அதை தவிர நார் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதும், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதும், மலச்சிக்கலை உருவாக்கும். மனஅழுத்தமும் மலச்சிக்கலை உருவாக்கும் காரணியாகும். மலச்சிக்கலை நீக்கும் உணவுகள் ௧. நார் சத்து நிறைந்த காய்கறிகள் - அனைத்து கீரை வகைகள், பீன்ஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட். ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். ௨. முழு தானியங்கள், பருப்பு வகைகள் உணவில் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். ௩. நீர் தேவையான அளவு அருந்த வேண்டும். ௪. காபி - 200 மில்லி கிராம் அளவு அருந்தலாம். ௫. சியா விதைகள், ஆளி விதைகள் - ஐந்து கிராம் அளவு சேர்ப்பது மலச்சிக்கலை தீர்க்கும். ௬. ஒரு...