Tuesday 30 August 2022

விளாம்பழம்

விளாம்பழம் 




    விளாம்பழம் மிக விலை குறைவாக கிடைக்கக்கூடிய அதீத மருத்துவ குணங்களை கொண்ட பழமாகும். அகத்தியர் மருத்துவம் இதனை முதன்மை பழம் என குறிப்பிடுகிறது.  விளாம்பழம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகமாக கிடைக்கும்.

    விளாம்பழத்தின் ஓட்டை நீக்கி உள்ளிருக்கும் விழுதுகளை நாட்டு சர்க்கரையுடன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். இந்த பழம் புளிப்பும், இனிப்பும் கலந்த  சுவை உடையது. நல்ல பழுத்த விளம்பழங்களையே சாப்பிட வேண்டும். 

    விளாம்பழத்தை பயன்படுத்தி ஜாம், ஜூஸ் மற்றும் ரசம் தயாரிக்கலாம். 



மருத்துவ பலன்கள் 



1. விளாம்பழத்தை சாப்பிடுவதால் வாதம், பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களும் குணமாகும்.

2. அதிக அளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்து உள்ளதால் எலும்புகளை வலுவாக்கும்.

3. செரிமான கோளாறுகளை சரிசெய்து பசியை தூண்டவும் விளாம்பழம் உதவுகிறது.

4. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த உதவும்.

5. வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் நோய்கள் வராமல் பாதுகாக்க உதவும்.

6. ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

7. இதயத்தை பலப்படுத்தும்.

8. மலச்சிக்கலை சீராக்க பயன்படுகிறது.

9. விளாம்பழம் வைட்டமின் - சி குறைபாட்டை சரிசெய்ய பயன்படுகிறது.

10. விளாம்பழ மரத்தின் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்த உயர் இரத்த அழுத்தம் குறையும்.


SPICE OF THE WEEK - CARDAMOM

 SPICE OF THE WEEK


CARDAMOM



    Cardamom is a spice, with an intense slightly sweet flavor used as seed, oil and extract. It is originated from India now available worldwide and used in sweet and savory dishes. cardamom have been used in traditional medicine for centuries.


HEALTH BENEFITS OF CARDAMOM 

1. Anti -oxidant and Diuretic properties of cardamom helps to lower blood pressure level.

2. Cardamom powder helps to fight cancer.

3. Cardamom powder decrease liver inflammation induced by diet high in carbohydrate and fat

4.  Helps in digestion, relives stomach discomfort, nausea and vomiting

5. Cardamom used to treat bad breath 

6. It has anti-bacterial properties fights against infection

7. Cardamom may increase airflow to the lungs and improves breathing.

8. Cardamom powder may lower blood sugar levels

9. Cardamom extract helps to reduce anxiety.

10. Cardamom extract reduces the risk of fatty liver diseases.


 

Friday 26 August 2022

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள் -2

 

 உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் பழச்சாறு வகைகள்






பசலைக் கீரை பழச்சாறு 


தேவையான பொருட்கள் 


பசலைக் கீரை  - 100 கிராம் 

பச்சை திராட்சை - 30 எண்கள் 

வெள்ளரிக்காய்  - 50 கிராம் 

துளசி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன் 

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு 

எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சை பழத்தில் இருந்து எடுத்தது.



செய்முறை 

1. பசலைக் கீரை, புதினா இலைகளை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.

2. பச்சை திராட்சையை நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும் 

3. வெள்ளரிக்காய் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.

4. பின்னர் மிக்ஸியில் பசலைக்கீரை, புதினா இலைகள், பச்சை திராட்சை, வெள்ளரிக்காய் துண்டுகள், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

5. பருக கொடுக்கும் பொழுது துளசி விதைகளை சேர்த்து கலக்கி கொடுக்கவும். ஐஸ் கட்டிகள் சேர்க்க கூடாது. 



பலன்கள் :


1. அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

2. நார்ச்சத்து அதிகம் இருப்பதால்  செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

3. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

4. வைட்டமின் சி, பி 6, கே, தாது உப்புக்களான மாங்கனீசு, பொட்டாசியம் நிறைந்தது.

5.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

6.  உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய நோய் வராமல் தடுக்கிறது .

7. உடல் பருமனை குறைப்பதற்கு பயன்படுகிறது.

8. எலும்புகளை வலுவாக்கும்.


Thursday 25 August 2022

கீரைகளும் அதன் பலன்களும் - 2

 கீரைகளும் அதன் பலன்களும்


பொன்னாங்கண்ணி கீரை  






    பொன்னாங்கண்ணி கீரை நம் இந்தியாவில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒரு கீரை வகையாகும். இதில் இரண்டு வகை உள்ளது பச்சை நிறத்தில் இருப்பது இந்தியாவில் விளைய கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ளது சீமை பொன்னாங்கண்ணி என அழைக்கப்படுகிறது. நாட்டு வகை கீரை அதிக நற்குணங்களை உடையது. இதை பொரியல், கூட்டு, மசியல், சூப் என பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். 

    இந்த கீரையை நம் உணவில் சேர்த்து கொள்வதால் சருமம் பொன் போல் மின்னும். இதை தவிர இந்த கீரை அதிக மருத்துவக்குணங்களை உடையது. அவை :

1.உடல் எடை குறைய பொன்னாங்கண்ணி கீரையை நம் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கீரையை மிளகுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2. பொன்னாங்கண்ணி கீரை உடல் வலிமையை அதிகப்படுத்தும். எலும்புகளை வலுப்படுத்தும்.

3. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்.

4. இதயம் மற்றும் மூளைக்கு புத்துணர்வை அளித்து நாம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக  செயல்பட  பயன்படுகிறது. 

5. கல்லீரல் மற்றும் மூல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

6. பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உட்கொள்வதால் கண் பார்வை நன்றாக தெரியும்.

7. இரத்தத்தை சுத்திகரிக்கும்.

8.  அதிக நேரம் கணிப்பொறி  அல்லது அலைபேசி உபயோகிக்கும் பொழுது ஏற்படும் கண் சிவப்பை சரி செய்ய பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.

9. பொன்னாங்கண்ணி கீரை சரும பிரச்சனைகளை சரி செய்து மேனி அழகு பெற உதவும்.

10. ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட இருமலை குறைக்க உதவுகிறது.

11.  உடல் எடை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.

12. பொன்னாங்கண்ணியில் வைட்டமின் ஏ, பி, சி , தாது உப்புக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளது.








Wednesday 24 August 2022

பேரிக்காய்

 


பேரிக்காய் 



        பேரிக்காய் ஒரு மழைப்பருவ பழம். இது ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கிடைக்கும். இது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டது. 

பேரிக்காயின் பலன்கள் 


1. பேரிக்காய் அதிக நார்ச்சத்து உடையது. மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது.

2. பேரிக்காய் குறைந்த கலோரியை கொண்டது. எனவே உடல் பருமன் குறைவதற்கு பயன்படுகிறது.

3. பேரிக்காய் அதிக நீர்ச்சத்தை உடையது, உடலில் நீரேற்றமாக இருக்க உதவுகிறது.

4. இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இதயத்தில் உள்ள இரத்த நாளங்களை பலப்படுத்த உதவுகிறது. 

5. கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது.

6. தாமிரச்சத்து நிறைந்தது. தாமிரம் நரம்பு செயல்பாட்டை சீர்படுத்த உதவுகிறது. 

7. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

8. அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமானமாக நேரம் எடுத்து கொள்ளும். எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

9.  பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே, சி ஆகிய சத்துக்கள் உடையது.

10. எளிதில் கிடைக்க கூடிய விலை குறைவான ஒரு ஆரோக்கிய உணவு பேரிக்காய். 




Tuesday 23 August 2022

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள்

 மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் உணவுகள் 



        மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக சிக்கலானது மூளை . மூளை ஒரு மனிதனின் உடலில் அனைத்து  செயல்பாடுகளும்  ஒழுங்காக நடைபெற உதவுகிறது .  ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மூளையின் செயல்பாடுகள் குறையத் துவங்கும். அதனால் ஞாபக மறதி, அல்சைமர் போன்ற நோய்கள் உருவாகும். மேலும் நரம்பு தளர்ச்சி, திக்கு வாய், நடையில் மாற்றம், கவனக்குறைபாடு ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க பின்வரும் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

1. பச்சை காய்கறிகள் :

        பச்சை காய்கறிகளான கீரை வகைகள், ப்ரோக்கோலி, போன்றவற்றில் வைட்டமின் - கே, லூட்டின், இரும்புச்சத்து, மற்றும் பீட்டா கரோடின் அதிகம் இருப்பதால் அவை மூளையின் செயல்திறன் குறைபாட்டை சரிசெய்ய உதவுகிறது. 


2.  கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகள் 

            கொழுப்புச்சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகமா இருப்பதால் அவை பீட்டா - அமைலாய்டு என்னும் புரதத்தின் அளவை மூலையில் சரியான அளவு இருக்குமாறு செய்து மூளையில் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.


3.  ஸ்ட்ராவ்பெர்ரி. ப்ளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி ஆகியவற்றில் உள்ள  இயற்கை நிறமிகள் ஞாபக திறனை அதிகரிக்கும்.


4.   காபி மற்றும் டீ  - இல் உள்ள காபின் (caffeine ) கவனக்குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.


5. பாதாம், வால்நட் போன்றவற்றில் மூளைக்கு தேவையான நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவற்றை தினமும் உட்கொள்வதால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.





Friday 19 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

 

தலைவலியில் இத்தனை வகைகளா? - 2

              தலைவலி


                      


இரண்டாம் நிலைத் தலைவலிகள்


        இரண்டாம் நிலைத் தலைவலிகள் என்பது நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். பிரச்சனை என்னவென்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்வதே இந்த வகை தலைவலிகளை குணப்படுத்தும்.

சைனஸ் தலைவலி 


        சில நேரங்களில் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி ஏற்படலாம். சைனஸ் என்பது நம் மூக்குப்பகுதியில் உள்ள சிறிய காற்று பைகள் போன்ற அமைப்பாகும். சில நேரங்களில் இந்த பைகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒவ்வாமையின் காரணமாக வீங்கி அடைத்து கொள்ளும். அதை தான் சைனஸ் இன்பெக்ஷன் என கூறுகிறோம். 

        சைனஸ் தலைவலி காலநிலை மாற்றத்தால் ஏற்படலாம். இந்த தலைவலி மூக்குப்பகுதியிலும், நெற்றியிலும் வலி உண்டாகும். 

ஹார்மோன் தலைவலி 


        பெண்களுக்கு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் இந்த தலைவலி மாதவிடாய் நாட்களிலும், கர்பகாலத்திலும் அதிகமாக இருக்கும். மாதவிடாய் நாட்களுக்கு முன்னும், பின்னும், தலைவலி உருவாக வாய்ப்புகள்  உண்டு.  இதை மாதவிடாயில் தோன்றும் ஒற்றை தலைவலி எனவும் கூறலாம்.


காபின் தலைவலி (caffeine headache)


        காபின் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.அளவுக்கு அதிகமா காபின் எடுத்து கொள்வது தலைவலியை உண்டாக்கும். ஒற்றைத் தலைவலியை ஊக்குவிக்கும் ஒரு காரணியாக காபின் செயல்படுகிறது.  காபின் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு வரை எடுத்து கொள்வது ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க உதவும்.

உடல் உழைப்புக்கு பின் வரும்  தலைவலி (exertion headache )


        அதிக நேர உடற்பயிற்சி, பளு தூக்கும் பயிற்சி, நீண்ட தூர ஓட்டப்பயிற்சி என அதிக உடல் உழைப்பு தேவைப்படும் பயிற்சிகளுக்கு பிறகு தலைவலி உண்டாகும். ஏனெனில் இந்த பயிற்சிகளை செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தலையின் இரண்டு புறத்திலும் வலி உண்டாகும். 

        இந்த தலைவலி சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். அதிக நேரம் நீடித்தால் உடனே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தால் தலைவலி (Hypertension headache )


            உயர் இரத்த அழுத்தம் தலைவலியை உண்டாக்கும். இது உடலுக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும். இரத்த அழுத்தம் அதிக அளவு உயரும் பொழுது இந்த தலைவலி ஏற்படும். இதை சரியாக கவனித்து சிகிச்சை செய்யா விட்டால் மாரடைப்பு, மூளையின் இரத்த நாளங்களில் பாதிப்பு ஆகியவை ஏற்படும். 

ரீபௌண்ட் தலைவலி  (Rebound  headache )


        ரீபௌண்ட் தலைவலி அதிகமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மிதமாக ஏற்படும் ஒரு தலைவலியாகும். வலி நிவாரணிகளை அதிகமாக எடுத்து கொள்ளும் பொழுது இந்த தலைவலி உண்டாகும். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பதே இந்த வகை தலைவலி வராமல் தடுப்பதற்கு வழியாகும்.

போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி (post - traumatic headache)


        போஸ்ட் - ட்ருமாட்டிக் தலைவலி என்பது ஏதோவொரு சூழ்நிலையில்  தலையில் காயம் ஏற்பட்டதற்கு  பிறகு உருவாகும் ஒரு தலைவலி ஆகும். இது ஒற்றைத்தலைவலி அல்லது டென்ஷன் தலைவலி போல் இருக்கும். பொதுவாக தலையில் காயம் ஏற்பட்ட பிறகு ஆறு முதல் பனிரெண்டு மாதங்கள் வரை இருக்கும் .

முதுகெலும்பு தலைவலி (spinal  headache )


        முதுகெலும்பு தலைவலி நம் தண்டுவட திரவத்தின் அழுத்தம்  குறைவதால் ஏற்பட்டு இடுப்புப்பகுதியில் வலியை உண்டாக்கும்.  நெற்றி, முன் கழுத்து, தலையின் பின்புறம் ஆகிய பகுதிகளில் வலி உண்டாகும்.  குமட்டல், வாந்தி, கண் பார்வையில் மாற்றம், கைகளில் வலி உண்டதால் ஆகியவை இந்த தலைவலியின் அறிகுறிகளாகும்.




Thursday 18 August 2022

தலைவலியில் இத்தனை வகைகளா? - 1

தலைவலி




        தலைவலி என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். மித வலியிலிருந்து தாங்க முடியாத அளவு வலி என வலியிலும் பல நிலைகள் உண்டு.  ஓருவருக்கு மாதத்திற்கு எத்தனை முறை தலைவலி வருகிறது என்பதைப் பொருத்து,  குறுகிய கால தலைவலி, நாள்பட்ட தலைவலி என வகைப்படுத்தப்படுகிறது.

1.குறுகிய கால தலைவலி :
    

        ஒரு   மாதத்தில் 15 நாட்களுக்கு குறைவாக அடிக்கடி ஏற்படும் தலைவலி அரை மணி நேரம் தொடங்கி பல மணி நேரத்திற்கு நீடிக்கும்.


2. நாள்பட்ட தலைவலி :

            ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு மேல்  ஏற்படும் தலைவலி   தொடர்ச்சியாக  இருந்து கொண்டே இருக்கும்.




    தலைவலியில் பல வகைகள் உண்டு. முதன்மை வகைகள் பின்வருவன:


அதீத பதட்டத்தால் தலைவலி :


    அதீத பதட்டத்தால் தலைவலி எவருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். பொதுவாக மனஉளைச்சலினால் ஏற்படுகிறது. இந்த தலைவலி இருந்தால் சோர்வும், தலை முழுவதும் வலியும்  உண்டாகும். கழுத்து, நெற்றி மற்றும் தோள் தசைகளில் வலி உண்டாகும். 

இதை சரிப்படுத்த : பதட்டம் கொள்ளக்கூடாது. மனஉளைச்சலை சரியாக கையாள வேண்டும்.




கொத்து தலைவலி :


    கொத்து தலைவலி என்பது எரிச்சலுடன் கூடிய தலைவலியாகும். இது ஒரு கண் அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் மட்டும் உருவாகும் வலியாகும். கண் வீக்கம் , விழி முழுவதும் சிகப்பு நிறமாக மாறுதல், அதிக வியர்வை, மூக்கடைப்பு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 

    கொத்து தலைவலி 15 நிமிடம் முதல் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நாளில் பல முறை ஏற்படும். ஒரு தடவை தலைவலி குறைந்தவுடன் அடுத்த தலைவலி ஆரம்பிக்கும். தொடர்ச்சியாக வலி இருந்து கொண்டே இருக்கும். ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய ஒரு தலைவலியாகும். இந்த தலைவலி உருவாவதற்கான சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.


ஒற்றை தலைவலி (மைக்ரேன்)


        ஒற்றை தலைவலி ஒரு நரம்பியல் நோயாகும். தலையின் ஒரு புறம் மட்டும் துடிக்கும் வலி தோன்றும். பல நாட்களுக்கு நீடிக்கும். அதிக வெளிச்சம் மற்றும் சத்தம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குமட்டலும், வாந்தியும் பொதுவான அறிகுறிகள். சில பேருக்கு ஒற்றை தலைவலி ஏற்படும் பொழுது கண் குறைபாடுகளும் உருவாகும். 

        பெண்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். ஒற்றை தலைவலி உருவாவதற்கான காரணிகள் தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவது, சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாமல் இருத்தல். ஹார்மோன் அளவின் மாற்றங்கள், சில உணவு வகைகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆகியவையாகும்.

    இதை சரிப்படுத்த ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். சரியான நேரத்தில் உணவை சாப்பிட வேண்டும். நோயை உருவாக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.


ஹெமிக்ரானியா தொடர் தலைவலி :      

    ஹெமிக்ரானியா தொடர் தலைவலி என்பது  மிதமான தலைவலி தலையின் ஒரு புறத்தில் மட்டும் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். ஒரு நாளின் சில நிமிடங்கள் மட்டும் தீவிரமான தலைவலி இருக்கும். இது பெண்களை அதிகமாக பாதிக்கும். 

        கண் எரிச்சல், மூக்கடைப்பு, நெற்றியில் அதிக வியர்வை சுரப்பது, அமைதியற்ற தண்மை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். 


குத்துத் தலைவலி :

        குத்துத்தலைவலி  என்பது குறைந்த நேரத்தில் தீவிரமான தலைவலி ஏற்படும். இது சில நொடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு நாளில் பல முறை உண்டாகும் இந்த தலைவலி எந்த வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.  ஒவ்வொரு முறையும் தலையின் வெவ்வேறு பகுதியில் தலைவலி உருவாகும்.


தண்டர் கிளாப் தலைவலி 


        தண்டர் கிளாப் தலைவலி என்பது இடி இடிப்பது போல் வலி தோன்றி ஒரு நிமிடத்தில் குறைந்து விடும். ஆனால் இந்த தலைவலி நீண்ட நேரம் இருந்தால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். 

    இந்த தலைவலி பக்கவாதம், மூளையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைதல் , மூளையில் அடிபடுதல்,  தண்டுவடத்தில் திரவம் கசிதல் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம். இந்த தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து  உடல்நிலை குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.





            











     

Tuesday 16 August 2022

SPICE OF THE WEEK - BAY LEAF

BAY LEAF





    Bay leaf is a herb comes from bay laurel family, native to the Mediterranean. It is one of the standard cooking  ingredient in many savory dishes all around the world. 

    There are different varieties of bay leaf is available. Mediterranean bay leaf, Indian bay leaf, California bay leaf and Indonesian bay leaf. Indian bay leaf has a similar taste of cinnamon where the California bay leaf slightly have mint flavor. 


HEALTH BENFITS OF BAY LEAF


1. Inhibit the growth of breast and colorectal cancer cells.

2. Consuming bay leaf tea helps to manage blood glucose levels in diabetes patients

3. Reduces inflammation in the wound area.

4. Bay leaf tea helps to prevent kidney stones

5. Smelling the bay leaf smoke helps to improve memory and reduces anxiety

6. Bay leaf tea helps to treat ulcers

7. Helps to prevent heart diseases

8. Rich in Vitamin A, C, B6 , Iron, Magnesium and Zinc

9. Bay leaf tea helps to improve the quality of sleep

10. Bay leaf oil helps to reduce joint pain


PREPARATION OF BAY LEAF TEA

1. Take 200 ml of water and boil it.

2. cut 2 bay leaves into small pieces and add it into boiling water.

3. Add a pinch of cinnamon powder 

4. Boil it for 2-3 minutes then keep it aside for few minutes then filter it.

5. Add honey for taste and drink


        Can prepare this drink overnight by soaking the bay leaves in boiled water and morning filter it and use it.

Friday 12 August 2022

சங்குப்பூ

சங்குப்பூ 







       சங்குப்பூ  எளிதில் வளரக்கூடிய ஒரு கொடி வகை. முன்பெல்லாம் தெருவோரங்களிலும்,  வேலி படல்களிலும் வளரும். சங்குப்பூ  நீல நிறத்திலும், ஊதா நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படும்.  பொதுவாக நீல நிறத்தில் பூக்கும் பூக்களே அதிகம்.  இந்த பூவானது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.  நம் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

    சங்குப்பூவை  கொதிக்கும் நீரில் சேர்த்து தேன் கலந்தும் அல்லது கலக்காமலும் பருகலாம். 


சங்குப்பூவின் மருத்துவ குணங்கள் 


1.  சங்குப்பூ சாற்றை அருந்துவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

2. சங்குப்பூ சாறு அருந்துவதால் பதட்டம் மற்றும் மன உளைச்சல் குறையும்.

3. சங்குப்பூ சாறு நீரிழிவு நோய்  வராமல் தற்காத்து கொள்ள உதவுகிறது.

4. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து இதய நோயில் இருந்து பாதுகாக்கிறது 

5. சங்குப்பூ உடலில் உள்ள அதிக நீரையும், உப்பையும் வெளியேற்ற உதவி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

6. சங்குப்பூ சாறு உடலின் வெப்ப நிலையை குறைத்து காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

7. சங்குப்பூ செடியின் இலைகளை சாறு எடுத்து அருந்த மாதவிடாயினால் ஏற்படும் அதிக இரத்த போக்கை குறைக்க உதவுகிறது.

8. சங்குப்பூ சாறு ஆஸ்துமா போன்ற  சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

9. சங்குப்பூ வழுக்கையையும், இளநரையையம்  சரிப்படுத்த பயன்படுகிறது.

10.  சங்குப்பூ சாறு கல்லீரலை பலப்படுத்தும்.




 

Tuesday 9 August 2022

கீரைகளும் அதன் பலன்களும் மூக்கிரட்டை - 1

கீரைகளும்  அதன் பலன்களும் 

மூக்கிரட்டை 




    நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதே சிறந்த வழியாகும். கீரைகள் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களை உள்ளடிக்கியது. கீரைகளில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஓன்று தான்  மூக்கிரட்டை. 


    எதன் மீதும் பற்றிப் படராமல், நிலத்தில் படர்ந்து, தனித் தன்மையுடன் வளரும்  ஒரு செடிதான், மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன. 


1. மூக்கிரட்டை சாப்பிடுவதால் கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சு கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

2. வாத நோய்களை கட்டுப்படுத்தும் 

3. மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய் இருப்பவர்கள் மூக்கிரட்டையை உட்கொள்ள நச்சு நீரை வெளியேற்றி வயிற்று உப்பிசத்தை குறைக்கும். 

4. தொற்று நோய்களின் பாதிப்பை சரிப்படுத்தும்.

5. சிறுநீர்ப் பாதை தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

6. மூளைக்கு ஆற்றலை அளித்து உடலுக்கு சுறுசுறுப்பையும்,  மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கும்.

7. உடல் பருமனை குறைக்க உதவுகிறது 

8. சுவாச பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது 

9. புற்று நோயை உண்டாகும் நச்சுக்களை அழிக்க உதவும் 

10. உடலில் முதுமை தன்மையை குறைத்து இளமையை தக்க வைக்க உதவும். 

11. செரிமான கோளாறுகள், வயிற்று பூச்சிகள் என அனைத்து வயிற்றுப்பிரச்னைகளை சரி செய்ய உதவும்.

12. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 


Thursday 4 August 2022

பதட்டத்தை தணிப்பது எப்படி?

 பதட்டத்தை தணிப்பது எப்படி?




     பதட்டம் என்பது மனஉளைச்சலுக்கு நம் உடம்பின் எதிர் வினையாகும். பயம், கவலை, என கலந்த உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கும். 

பதட்டத்தின் அறிகுறிகள் 

  • இதய துடிப்பு அதிகரித்தல் 
  • மூச்சு வாங்குதல் 
  • அமைதியின்மை 
  • கவனக்குறைபாடு 

     மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் எல்லாம்  பொதுவான அறிகுறிகள் ஆகும். ஒவ்வொரு மனிதருக்கும் அறிகுறிகள்  வேறுபடலாம்.  வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு, பீதியடைதல், தூக்கத்தில் கெட்ட கனவு, மற்றும் வலி நிறைந்த எண்ணங்களும் ஏற்படும்.

பதட்டத்தை தணிக்கும் வழிகள் 


1. தினமும் உடற்பயிற்சி செய்தல், குறைந்தது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்தல் உடல்நலனுக்கு மட்டும் அல்லாமல் மன நலத்திற்கும் நன்மை பயக்கும்.


2. ஆல்கஹால் அருந்துவதை தவிர்த்தல் 


3. புகை பிடிப்பதை நிறுத்துதல் 


4. இரவில் நன்றாக உறங்குதல் 


5. த்யானம் செய்தல்

 
6. சரிவிகித உணவை உட்கொள்ளுதல் 


7. பதட்டத்தில் இருக்கும் பொழுது ஆழ்ந்த சுவாசத்தை முயற்சிக்க வேண்டும்.


8. சாமோமில் டீயை அருந்துவது பதட்டத்தை தணிக்கும்.


Wednesday 3 August 2022

FRUIT OF THE SEASON - GUAVA

 FRUIT OF THE SEASON



GUAVA


    Guava is a tropical fruit cultivated in many tropical and subtropical regions. There are different varieties are available. The fruit is oval in shape with light green color and inside with edible seeds. Guava leaves also edible and used for medical purpose.


HEALTH BENEFITS OF GUAVA FRUIT AND GUAVA LEAVES


  • Guava leaves extract helps to reduce blood sugar levels, long- term blood sugar control and insulin resistance.
  • Guava leaves extract helps to reduce LDL cholesterol and increase HDL cholesterol
  • Guava contains high level of potassium and digestive fibre which improves heart health.
  • Guava leaves extract helps to relieve uterine cramps
  • Guava rich in digestive fiber which aids healthy bowel movement and prevent constipation
  • Guava can be used for weight loss as it provide very low calories
  • High in anti-oxidants prevent free radical  from damaging cells thus prevents cancer.
  • Guava is a fantastic source of Vitamin - C which improves immune system
  • Protects skin from damage
  • Guava leaf tea can be used to treat diarrhoea


Monday 1 August 2022

உலக தாய்ப்பால் வாரம் (1-7) ஆகஸ்ட் 2022

உலக தாய்ப்பால்  வாரம் 

(1-7) ஆகஸ்ட் 2022



உலக தாய் பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது . இதன் மூலம் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே ஆகும். 


உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் 

"தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள் 
அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்" 

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது.  இவை தாய், குழந்தை இருவரின் நலன் காக்க உதவுகிறது.


உலக சுகாதார அமைப்பு குழந்தையின் பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க அறிவுறுத்துகிறது. இரண்டு வயது வரை இணை உணவுகள் உடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

தாய்மார்கள் அனைவரும் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் , பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு மருத்துவ பணியாளர்கள் வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தை இறப்பை குறைக்கிறது.


தாய்ப்பால் தருவதால் பெரும் நன்மைகள் 


குழந்தைக்கு 

  • தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊதச்சத்துக்களை உடையது.
  • எளிதில் செரிமானம் ஆக கூடியது 
  • குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 
  • குழந்தை சரியான எடையை பெறவும், இளம் வயதில் அதிக உடல் எடை அதிகரிப்பை தடுக்கிறது.
  • தாய்ப்பால்  குழந்தைகள் ஆஸ்துமா, ஒவ்வாமை, மற்றும் இதய நோய்கள் உண்டாவதில் இருந்து தற்காக உதவுகிறது.

தாய்மார்களுக்கு 

  • உடல் பருமனை குறைக்க உதவுகிறது 
  • கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கர்ப்ப பை அதனுடைய பழைய நிலையை அடைய உதவுகிறது 
  • மனஅழுத்தம், நீரிழிவு நோய், இதய நோயில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது.
  • தாய்ப்பால் தருவது ஒரு இயற்கையான குடும்ப கட்டுப்பாடு முறையாகும்.
  • தாய்ப்பால் தருவது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவுகிறது. 


தாய்ப்பால் தருவதற்கான வழிமுறைகள் 


  1.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். போர்முலா மில்க் பரிந்துரைப்பதை குறைக்க வேண்டும். முறையான தாய்ப்பால் தரும் பயிற்சிகளை கற்று தர வேண்டும்.
  2.  கர்ப்ப காலத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை கர்ப்பிணி பெண்களிடம் கலந்துரையாட வேண்டும்.
  3. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் அணைப்பை ஏற்படுத்தி சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்க வைக்க வேண்டும்.
  4. குழந்தையை கையில் வைத்திருக்கும் முறை, குழந்தை பால் அருந்தும் முறையை கவனிக்க வேண்டும். தாய்மார்களை  தாய்ப்பால் தருவதால் வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள தயார் படுத்த வேண்டும்.  
  5. எப்பொழுதும் குழந்தை தாயுடன் இருக்க வேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை இருக்கும் பொழுது தாய்ப்பாலை தானமாக பெற்று குழந்தைக்கு கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
  6. தாய்மார்கள் குழந்தை எப்பொழுது பசியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் தரும் நேரங்களை குறைத்து கொள்ள கூடாது.
 

WORLD BREAST FEEDING WEEK - (1-7) AUGUST 2022

 WORLD BREAST FEEDING WEEK
(1-7) AUGUST 2022



World Breast feeding week is celebrated every year from 1 to 7 August to encourage breast feeding and improve the health of children around the world. 

The theme for 2022 is 

" STEP UP FOR BREAST FEEDING 

 EDUCATE AND SUPPORT"


    According to UNICEF, a baby should be breastfed within an hour of birth and this should continue for the first six months of the child’s life. Breastfeeding plays an important role in managing the burden of malnutrition. Breastfeeding provides food security and reduces inequality in society. 

    World Breastfeeding Week aims to highlight the huge benefits that breastfeeding can bring to the health and welfare of babies and benefits to maternal health, focusing on good nutrition, poverty reduction, and food security.

    The World Health Organization recommends exclusive breastfeeding for the first 6 months of life, followed by continued breastfeeding with appropriate complementary foods for up to 2 years and beyond. 


    All mothers should be supported to initiate breastfeeding as soon as possible after birth, within the first hour after delivery and should receive practical support to enable them to initiate and establish breastfeeding and manage common breastfeeding difficulties.

    Breastfeeding is one of the most effective ways to ensure child health and survival. Breastmilk is the ideal food for infants. It is safe, clean and contains antibodies which help protect against many common childhood illnesses. Breastmilk provides all the energy and nutrients that the infant needs for the first months of life, and it continues to provide up to half or more of a child’s nutritional needs during the second half of the first year, and up to one third during the second year of life. 


BENEFITS OF BREAST FEEDING

FOR BABIES

  • Breast milk is the best source of nutrition for babies
  • It protects babies from short -term and long-term illness
  • Breast milk contains anti bodies which helps to build strong immune system in babies
  • It is readily available at right temperature
  • It is easy to digest
  • It promotes healthy weight gain and prevents child hood obesity.

FOR MOTHER

  • Breast feeding helps to reduce weight 
  • Breast feeding helps the uterus contract
  • Breast fed mother have a lower risk for depression
  • Breast feeding lowers the risk of high blood pressure, cardio vascular diseases, type 2 diabetes, ovarian cancer and breast cancer
  • Continued breastfeeding also pauses ovulation and menstruation. The suspension of menstrual cycles may actually be nature’s way of ensuring there’s some time between pregnancies.
  • Breast feeding saves money and time


TEN STEPS TO SUCCESSFUL BREAST FEEDING

  1.  Hospitals should support breast feeding by not promoting formula feeds and bottle feeding. They should make standard practice for breastfeeding care.
  2. Hospitals should support breast feeding by training the staffs on supporting breast feeding mothers and analyze their knowledge and skills
  3. During antenatal care have to discuss the importance of breast feeding for babies and mothers and prepare them how to feed their baby.
  4. The care right after birth should be skin to skin contact between mother and baby and helping mothers to put the baby in the breast at right way
  5. Support mothers to breast feed by check the positioning, attachment and suckling and helping mothers with common breastfeeding problems
  6. supplementing with donor breast milk when it is needed
  7. Make sure the baby and mother stay together day and night
  8. Help mothers to know when their baby is hungry and not limiting the breast feed timings
  9. Counselling to be given for mothers about the risk of using bottles, teats and pacifiers
  10. Refer mothers to community resources for breast feeding.

"BREAST FEED IS A WAY TO CREATE BETTER BONDING BETWEEN MOTHER AND THE BABY"



Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition

Celebrating International Yoga Day: The Synergy of Yoga and Nutrition  The Origin of International Yoga Day      Every year on June 21, peop...